/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாலப்பாக்கத்தில் சிறுவனை தாக்கி வழிப்பறி
/
சித்தாலப்பாக்கத்தில் சிறுவனை தாக்கி வழிப்பறி
ADDED : ஜன 20, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி,சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மாடம்பாக்கம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் மூவருடன், திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு வீடு திரும்ப, சோழிங்கநல்லுார் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கும்பல், நான்கு பேரையும் தாக்கி 2,000 ரூபாய் பறித்து தப்பி சென்றனர். இதில், சிறுவன் பலத்த காயமடைந்தார்.
செம்மஞ்சேரி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

