/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் பூட்டை உடைத்து திருட்டு
/
கோவில் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : ஜன 06, 2025 02:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்,:செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பள்ளி கிராமத்தில் ஜி.எஸ்.டி., சாலையில் பழையான அம்மன் கோவில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று அதிகாலை கோவிலை திறக்க வந்த கோவில் பூசாரி ராதாகிருஷ்ணன், 58, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

