/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல் குவாரி லாரிகளால் கொடூர் சாலை சேதம்
/
கல் குவாரி லாரிகளால் கொடூர் சாலை சேதம்
ADDED : செப் 30, 2024 04:51 AM

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அடுத்த ஆக்கினாம்பட்டு கிராமத்தில் இருந்து கொடூர் கிராமத்திற்கு செல்லும் 3 கி.மீ., நீள தார் சாலை உள்ளது. கொளத்துார், மாலச்சேரி, வேட்டகாரக்குப்பம் மற்றும் கொடூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஆக்கினாம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில், நான்கு கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்படுவதால், இந்த சாலையில் தினசரி நுாற்றுக்கணக்கான லாரிகள் அதிக பாரங்கள் ஏற்றிச் செல்கின்றன.
இதனால், சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளது. கோடை காலத்தில் சாலையில் புழுதி பறப்பதாகவும், மழைகாலத்தில் சாலை சகதியாக மாறுவதாகவும், வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.