/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரும்புலியில் நிழற்குடை பஸ் பயணியர் கோரிக்கை
/
இரும்புலியில் நிழற்குடை பஸ் பயணியர் கோரிக்கை
ADDED : பிப் 17, 2025 01:32 AM

அச்சிறுபாக்கம்,:இரும்புலி ஊராட்சி கூட்டுச் சாலையில், பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் -- சூனாம்பேடு மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, இரும்புலி ஊராட்சிக்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த கூட்டுச்சாலைப் பகுதியில், அச்சிறுபாக்கம் மார்க்கத்தில், 25 ஆண்டுகளுக்கு முன், பேருந்து பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
இங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு பணிக்குச் செல்வோர் பயன்பெற்று வந்தனர்.
தற்போது உரிய பராமரிப்பின்றி விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, பயன்பாடு இன்றி வீணாகி உள்ளது.
எனவே, சூனாம்பேடு மார்க்கத்தில், இரும்புலி ஊராட்சிக்குச் செல்லும் சாலை ஓரம் உள்ள காலி இடத்தில் நிழற்குடை அமைக்க, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

