sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு

/

கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு

கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு

கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு


ADDED : பிப் 16, 2024 12:08 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கல்லுாரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ - மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ், எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு, பெற்றோரது ஆண்டு வருமானம், 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நடப்பாண்டில், புதிய மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில், வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், கூடுதல் விபரங்களுக்கு, தங்கள் கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us