sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தமிழறிஞர்களுக்கு அழைப்பு

/

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தமிழறிஞர்களுக்கு அழைப்பு

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தமிழறிஞர்களுக்கு அழைப்பு

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தமிழறிஞர்களுக்கு அழைப்பு


ADDED : அக் 14, 2024 06:25 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட தமிழறிஞர்கள், உதவித்தொகை பெற, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக சீரிளமைத்திறம் கொண்ட அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழறிஞர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதுமை காலத்திலும் பொருள் வறுமை தமிழ் தொண்டர் பெருமக்களைத் தாக்கா வண்ணம், மாதந்தோறும் 3,500 ரூபாயும், மருத்துவப்படி 500 என, மொத்தம் 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை வழங்கப்படுகிறது. 2024- - 25ம் ஆண்டிற்கு, அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us