/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கார்டு திருத்தம் செங்கை மாவட்டத்தில் முகாம்
/
ரேஷன் கார்டு திருத்தம் செங்கை மாவட்டத்தில் முகாம்
ADDED : பிப் 09, 2025 12:23 AM
செங்கல்பட்டு, பிப். 9- -
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாம், நேற்று நடந்தது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் திருத்தம் மற்றும் மொபைல் எண் சேர்த்தல் என, 205 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த சத்யா நகரில் நடந்த முகாமில், 12 இருளர்கள் ரேஷன் கார்டு கோரி மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அச்சிறுபாக்கம் அருகே அனந்தமங்கலம் ஊராட்சியில் நேற்று, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடந்தது.
அச்சிறுபாக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்தல், புதிய அட்டை பதிவு செய்தல், முகவரி மாற்றம், புகைப்படம் பதிவேற்றம் போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
அதில் நேற்று, மதுராந்தகம் தாலுகாவில் அனந்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தில் நடந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல், அட்டை புதுப்பித்தல், புகைப்படம் பதிவேற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட 39 மனுக்கள் பெறப்பட்டன.
அனந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.