sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில் கால்வாய் சீரமைப்பு

/

கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில் கால்வாய் சீரமைப்பு

கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில் கால்வாய் சீரமைப்பு

கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில் கால்வாய் சீரமைப்பு


PUBLISHED ON : அக் 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியால் மதுராந்தகத்தில், கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில், கால்வாய் துார்வாரி சீரமைக்கப்பட்டது.

மதுராந்தகம் ஏரிக்கரையில் இருந்து மாம்பாக்கம் ரயில்வே பாலம் வரை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கான்கிரீட் கால்வாயாக அமைக்காததால், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியது.

குறிப்பாக, மதுராந்தகம் நகரில், ஹிந்து சமய அறநிலைய துறைக்குச் சொந்தமான கோவில் நிலம் உள்ள பகுதியில், இந்த கழிவுநீர் கால்வாயில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியது. அதில் பிளாஸ்டிக் குப்பையும் குவிந்திருந்ததால் பன்றிகள் கிளறி கடும் துர்நாற்றம் வீசியது.

கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில், நிரந்தர தீர்வாக கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று, கழிவுநீர் கால்வாயில் இருந்த குப்பையை அகற்றி, துார்வாரி சீரமைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us