sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூடுவாஞ்சேரியில் கட்டுப்பாட்டை இழந்து டெய்லர் கடைக்குள் நுழைந்த கார்

/

கூடுவாஞ்சேரியில் கட்டுப்பாட்டை இழந்து டெய்லர் கடைக்குள் நுழைந்த கார்

கூடுவாஞ்சேரியில் கட்டுப்பாட்டை இழந்து டெய்லர் கடைக்குள் நுழைந்த கார்

கூடுவாஞ்சேரியில் கட்டுப்பாட்டை இழந்து டெய்லர் கடைக்குள் நுழைந்த கார்


ADDED : ஜன 11, 2025 11:31 PM

Google News

ADDED : ஜன 11, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி அடுத்துள்ள சீனிவாசபுரம் சிக்னலில் நேற்று காலை, செங்கல்பட்டில் இருந்து, தாம்பரம் நோக்கி கார் ஒன்று வந்தது.

சிக்னல் அருகில் வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் மூடியிருந்த டெய்லர் கடையின் இரும்பு 'ஷட்டர்' மீது மோதி நின்றது.

இதில், காரின் முன்பக்கம், கதவுகள் கடுமையாக சேதமடைந்தன. லேசான காயமடைந்த கார் ஓட்டுநர், காரில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார்.

உடனே, அங்கிருந்தோர் அவரை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையின் உரிமையாளர் விரைந்து வந்து, கடையை திறந்த முயன்றார். ஆனால், கடையின் இரும்பு 'ஷட்டர்' சேதமாகி, உள்ளே இருந்த கண்ணாடி பொருட்களும் உடைந்திருந்தது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து, கடையில் உடைந்த பொருட்களுக்கு காரின் உரிமையாளர் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்ததை தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்காமல், இருவரும் சமரசமாக சென்றனர். இந்த விபத்து சம்பவம், அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.






      Dinamalar
      Follow us