/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டூ-வீலர் மீது கேரவன் மோதி வாலிபர் பலி
/
டூ-வீலர் மீது கேரவன் மோதி வாலிபர் பலி
ADDED : அக் 09, 2024 08:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:கூவத்துார் அடுத்த முகையூரைச் சேர்ந்தவர் பாலசுந்தரம், 26. ஹோட்டல் ஊழியர். யமாஹா இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் வந்தவர், மீண்டும் முகையூர் திரும்பி கொண்டிருந்தார்.
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில், 6:00 மணிக்கு கடந்தபோது, எதிரில் வந்த கேரவன் வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.