sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஏரிக்கரை சீரமைப்பு துவக்கம்

/

கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஏரிக்கரை சீரமைப்பு துவக்கம்

கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஏரிக்கரை சீரமைப்பு துவக்கம்

கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஏரிக்கரை சீரமைப்பு துவக்கம்


ADDED : பிப் 18, 2025 05:56 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம் : வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே, கரிக்கிலி பறவைகள் சரணாலயம் உள்ளது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகள், இங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கரிக்கிலி சரணாலயத்தில் உள்ள பெரிய ஏரியிலும் கூடுகள் கட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன.

அதனால், வேடந்தாங்கலுக்கு இணையாக, கரிக்கிலி பகுதியும் பறவைகள் சரணாலயமாக, கடந்த 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

ஆண்டுதோறும் வேடந்தாங்கலில் பறவைகளின் சீசன் துவங்கும்போது, கரிக்கிலி சரணாலயமும், சுற்றுலா பயணியரின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. வேடந்தாங்கல் சரணாலயம் போன்ற தோற்றத்திற்கு, கரிக்கிலி சரணாலயம் மாற்றப்பட்டது.

இந்நிலையில், கரிக்கிலி சரணாலயத்தை புனரமைக்க தமிழக அரசு, கடந்த 2014ல் 50 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியது. இதையடுத்து சுற்றுலா பயணியர் நடைபாதையை விரிவுபடுத்துதல், ஏரி துார் வாருதல், கரை பலப்படுத்துதல், பார்வையாளர்கள் மாடம், குடிநீர் குழாய்கள், கழிப்பறை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டன.

இருப்பினும், சரணாலயத்தை சரியான முறையில் பராமரிக்காததால் இருக்கைகள், நடைபாதை, பறவைகள் மற்றும் விலங்குகள் வடிவில் அமைக்கப்பட்ட குழாய்கள் சேதமடைந்தன.

போதிய அளவில் பறவைகள் வரத்து இல்லாததாலும், சுற்றுலா பயணியர் வருகையின்றி பொலிவிழந்து, பயன்பாடின்றி காணப்பட்டது.

தற்போது, சரணாலயத்தில் ஏரிக்கரை பகுதிகளில் முட்புதர் நிறைந்து காணப்பட்டதால், அவற்றை வனத்துறையினர் வெட்டி அகற்றி சீரமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பறவைகள் வரத்தை அதிகரிக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us