/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயனின்றி காட்சிப்பொருளான கால்நடை குடிநீர் தொட்டிகள்
/
பயனின்றி காட்சிப்பொருளான கால்நடை குடிநீர் தொட்டிகள்
பயனின்றி காட்சிப்பொருளான கால்நடை குடிநீர் தொட்டிகள்
பயனின்றி காட்சிப்பொருளான கால்நடை குடிநீர் தொட்டிகள்
ADDED : பிப் 19, 2024 05:06 AM

மதுராந்தகம் : தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில், ஊராட்சிகள்தோறும் கால்நடை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 58 ஊராட்சிகளிலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், தலா 20,000 ரூபாய் செலவில், கால்நடை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இத்திட்டத்தை, ஊராட்சி நிர்வாகம் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், மதுராந்தகம் ஒன்றியத்தின் பெரும்பாலான ஊராட்சிகளில், இந்த கால்நடை குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல், காட்சி பொருளாகவே காணப்படுகின்றன.
தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன.
எனவே, கால்நடைகளுக்காக கட்டிய குடிநீர் தொட்டிகளில், ஊராட்சிகள்தோறும் தண்ணீர் நிரப்பி பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை பராமரிப்போர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

