ADDED : ஜன 12, 2024 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், நவநீத கிருஷ்ண சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. அதன் பஜனை குழுவினர், கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.
மார்கழி இறுதி வெள்ளிக்கிழமையான நேற்று, குழுவினர், கிருஷ்ணர் வேடம் தரித்தவருடன் பஜனை உலா சென்று, கோவிலை அடைந்தனர்.
அலங்கார கிருஷ்ணரை கோவில் முன் எழுந்தருள செய்து, சிறுவர் கோலாட்டத்துடன், சுவாமியை வலம், இடம் வந்து கூடாரைவல்லி உற்சவம் நடைபெற்றது.