sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தரமின்றி அமைக்கப்படும் தார்ச்சாலை செம்பூர் கிராமத்தினர் குற்றச்சாட்டு

/

தரமின்றி அமைக்கப்படும் தார்ச்சாலை செம்பூர் கிராமத்தினர் குற்றச்சாட்டு

தரமின்றி அமைக்கப்படும் தார்ச்சாலை செம்பூர் கிராமத்தினர் குற்றச்சாட்டு

தரமின்றி அமைக்கப்படும் தார்ச்சாலை செம்பூர் கிராமத்தினர் குற்றச்சாட்டு


ADDED : ஜூன் 12, 2025 02:36 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:கல்குளம் கிராமத்தில் இருந்து செம்பூர் செல்லும் தார்ச்சாலை, கையால் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக, கிராமத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

பவுஞ்சூர் அருகே கல்குளம் முதல் செம்பூர் இடையே, 4.5 கி.மீ., துாரம் கொண்ட தார்ச்சாலை உள்ளது. இச்சாலையை கல்குளம், செம்பூர், தண்டரை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கடுமையாக சேதமடைந்து, சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாகி வந்தனர்.

சாலையை சீரமைக்க, கிராமத்தினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பாக, நமக்கு நாமே திட்டத்தில், 3.78 கோடி ரூபாயில் சாலை அமைக்க, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்படும் தார்ச்சாலை, கையால் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக, கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால், சாலை விரைவில் சேதமடைய வாய்ப்பு உள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான முறையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us