sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்த மாணவர் விடுதி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்த மாணவர் விடுதி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்த மாணவர் விடுதி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்த மாணவர் விடுதி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?


ADDED : நவ 14, 2024 01:29 AM

Google News

ADDED : நவ 14, 2024 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேதமடைந்த மாணவர் விடுதி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?


செய்யூர் பஜார் பகுதியில், சித்தாமூர் சாலை ஓரத்தில், அரசு மாணவர் விடுதி உள்ளது. இதில், 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

விடுதி சுற்றுச்சுவர், கடந்த ஆண்டு பருவமழையின் போது இடிந்து விழுந்தது. அது, தற்போது வரை சீரமைக்கப்படாததால், விடுதி வளாகத்தில் நாய், மாடு போன்ற கால்நடைகள் உலா வருகின்றன.

இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஏ.முருகன், சித்தாமூர்.

...................

ஊரப்பாக்கம் பிரதான சாலையில் குப்பை கொட்டி அட்டூழியம்


காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி பிரியா நகர் பிரதான சாலை நுழைவாயில் பகுதியில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டி வந்தனர்.

நுழைவு வாயில் பகுதியில் குப்பையை கொட்டுவதால், அதை கால்நடைகள் இழுத்து சாலையில் போடுகின்றன. அதனால், அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன.

இதை கருத்தில் கொண்டு, குப்பை கொட்ட தடை விதித்து, விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, இப்பகுதியில் குப்பை கொட்டுவோரை கண்காணித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

- எஸ்.முரளிதரன், ஊரப்பாக்கம்.






      Dinamalar
      Follow us