sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு பிணவறைக்கு தண்ணீர் வசதி இல்லை

/

செங்கல்பட்டு பிணவறைக்கு தண்ணீர் வசதி இல்லை

செங்கல்பட்டு பிணவறைக்கு தண்ணீர் வசதி இல்லை

செங்கல்பட்டு பிணவறைக்கு தண்ணீர் வசதி இல்லை


ADDED : ஜூலை 08, 2025 08:03 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 08:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறைக்கு, தண்ணீர் வசதி இல்லாததால், உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில், பிணவறை உள்ளது.

இங்கு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சாலை விபத்தில் இறப்பவர்கள் மற்றும் கொலை, தற்கொலையால் இறப்பவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன.

தினமும், 10க்கும் மேற்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக பிணவறைக்கு வரும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், தண்ணீர் இல்லாமல் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்காலிகமாக குழாய்கள் வாயிலாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதுமட்டுமின்றி, அங்கு பணிபுரிபவர்களுக்கும் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தும், பிணவறைக்கு வரும் குழாயில் அடைப்பை சரி செய்யாமல், பொதுப்பணித் துறையினர் அலட்சியமாக உள்ளனர்.

உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் கருதி, தண்ணீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us