/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சார ரயில் மோதி சென்னை முதியவர் பலி
/
மின்சார ரயில் மோதி சென்னை முதியவர் பலி
ADDED : செப் 18, 2024 07:53 PM
மறைமலை நகர்:சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி, 62. நேற்று, சிங்கபெருமாள் கோவில் அருகில் உள்ள தெள்ளிமேடு கிராமத்தில் வசித்து வரும் தன் மகன் வீட்டிற்கு சென்றார்.
நேற்று மாலை, மீண்டும் அசோக் நகர் செல்ல, சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் வந்தார். தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சென்னை கடற்கரையில் இருந்து, திருமால்பூர் சென்ற புறநகர் மின்சார ரயில், ரவி மீது மோதியது. இதில், தலையின் பின் பக்கம் காயம் ஏற்பட்டு, ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், முதியவர் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.