/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செயின் பறிப்பில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது
/
செயின் பறிப்பில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது
ADDED : ஜன 22, 2025 12:13 AM

மேல்மருவத்துார், மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மனைவி லட்சுமி, 60.
இவர் நேற்று முன்தினம், பெரும்பாக்கத்தில் இருந்து, கூடலுாரில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மொறப்பாக்கம் -- கூடலுார் சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.
இதுகுறித்து லட்சுமி நேற்று, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்படி, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் சென்னை, நெசப்பாக்கம், பாரதியார் நகரைச் சேர்ந்த சஞ்சய், 20, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
அவரை கைது செய்து, செயினை பறிமுதல் செய்த போலீசார், அதை லட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
பின், மதுராந்தகம் நீதிமன்றத்தில் சஞ்சயை ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.