sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

முதல்வர் காப்பீடு திட்டம் இன்றுடன் முகாம் நிறைவு

/

முதல்வர் காப்பீடு திட்டம் இன்றுடன் முகாம் நிறைவு

முதல்வர் காப்பீடு திட்டம் இன்றுடன் முகாம் நிறைவு

முதல்வர் காப்பீடு திட்டம் இன்றுடன் முகாம் நிறைவு


ADDED : ஜூன் 03, 2025 07:46 PM

Google News

ADDED : ஜூன் 03, 2025 07:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இங்கு, பாரத பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்படி, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளை சேர்க்கும் வகையில் முகாம் நடத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.

அதன்படி, நகராட்சி சேர்மன் கார்த்திக், கமிஷனர் ராணி ஆகியோரின் முன்னெடுப்பில், நகராட்சி அலுவலகத்தில் கடந்த மே 28ம் தேதி, முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

இம்முகாமில் பங்கேற்று, காப்பீடு திட்டத்தில் சேர விரும்புவோர் ஆதார் அட்டை, வருமான சான்று மற்றும் ரேஷன் அட்டை ஆகிய சான்றுகளுடன் நேரில் வந்து, தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெறும் இம்முகாமில், தினமும் 200 நபர்களுக்கு பெயர் பதிவு செய்யப்படுகிறது.

அதன்படி, நேற்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 1,200 நபர்களுக்கு பெயர் பதிவு முடிந்துள்ளது. இன்று புதன் கிழமை மாலை 3:00 மணியுடன், முகாம் நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us