sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சித்தாமூர் பி.டி.ஓ., வளாகம் குளமாக மாறிய அவலம்

/

சித்தாமூர் பி.டி.ஓ., வளாகம் குளமாக மாறிய அவலம்

சித்தாமூர் பி.டி.ஓ., வளாகம் குளமாக மாறிய அவலம்

சித்தாமூர் பி.டி.ஓ., வளாகம் குளமாக மாறிய அவலம்


ADDED : அக் 27, 2024 01:01 AM

Google News

ADDED : அக் 27, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் பஜார் பகுதியில் பி.டி.ஓ., அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி வள மையம், வேளாண் விரிவாக்க மையம், அரசு மாணவியர் விடுதி, நுாலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இந்த வளாகத்தில், 2015ம் ஆண்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி, பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்கும்.

தற்போது பெய்த மழையின் காரணமாக, பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், மழைநீர் குளம் போல தேங்கி உள்ளது. இதனால், மாணவியர் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு வருவோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us