sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் அரசியல் தலையீடால் சிக்கல்

/

பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் அரசியல் தலையீடால் சிக்கல்

பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் அரசியல் தலையீடால் சிக்கல்

பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் அரசியல் தலையீடால் சிக்கல்


ADDED : அக் 16, 2024 12:33 AM

Google News

ADDED : அக் 16, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரில், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில், தேவைக்கேற்ப கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, குழந்தைகளின் பெற்றோர்வலியுறுத்தினர்.

இதை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், பள்ளி கட்டடம் கட்ட, கல்பாக்கம், சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம் பரிந்துரைத்தது.

நிலைய நிர்வாகம், 1.47 கோடி ரூபாய் மதிப்பில், தரை, முதல், இரண்டாம் ஆகிய தளங்களில், தலா இரண்டு வகுப்பறைகளுடன் கட்டடம் கட்ட அனுமதி அளித்தது.

கட்டுமான ஒப்பந்ததாரர், பல மாதங்களுக்கு முன் பூமி பூஜையும் நடத்தினார்.

பள்ளி வளாகத்தில் உள்ள பழைய சத்துணவு சமையலறை கட்டடத்தை இடித்து, அப்பகுதியையும் ஒருங்கிணைத்து வகுப்பறை கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

பழைய கட்டடத்தை இடிக்க, வட்டார வளர்ச்சி நிர்வாகம், ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றி, இடிக்க டெண்டரும் அளிக்கப்பட்டது.

அப்பகுதி வார்டு உறுப்பினர் நரசிம்மன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பதால், தி.மு.க.,பிரமுகர்கள், பழையகட்டடத்தை இடிக்கவிடாமல் தடுப்பதாக சர்ச்சைஏற்பட்டது.

ஒப்பந்ததாரரை இடிக்கவிடாமல் தடுத்ததாக கூறப்படும் நிலையில், வட்டார வளர்ச்சி நிர்வாகம் மற்றும் சாலை ஆய்வாளர் இடிக்க ஏற்பாடு செய்தும், கட்டட இடிப்பு தாமதமாகிறது.

இதன் காரணமாக, அணுமின் நிலையத்தினர் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டும் திட்டம்கேள்விக்குறியாகி, கிடப்பில் உள்ளது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என, இப்பகுதியினர்வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us