sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மெய்யூர் ஏரியில் மண் எடுப்பதை எதிர்த்து கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

/

 மெய்யூர் ஏரியில் மண் எடுப்பதை எதிர்த்து கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

 மெய்யூர் ஏரியில் மண் எடுப்பதை எதிர்த்து கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

 மெய்யூர் ஏரியில் மண் எடுப்பதை எதிர்த்து கலெக்டர் ஆபீஸ் முற்றுகை


ADDED : நவ 14, 2025 01:30 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: மெய்யூர் ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மெய்யூர் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மெய்யூர் ஊராட்சி ஏரியில் மண் அள்ள, 2023ம் ஆண்டு தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

பாலாற்றுக்கு அருகில் உள்ளதால், இந்த ஏரியில் நான்கு அடி ஆழத்திற்கு மேல் மணல் கிடைத்தது. இந்த மணலை, விற்பனை செய்தனர். தற்போது, மீண்டும் ஏரியில் மண் எடுக்க கனிமவளத் துறை, தனியாருக்கு கடந்த செப்., மாதம் அனுமதி வழங்கியது.

அதன் பின், ஏரியில் பல அடி ஆழத்திற்கு மண் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, மெய்யூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின், கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிமளாதேவியிடம், மனு அளித்தனர். 'மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us