/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வு செங்கையில் இன்று நடக்கிறது
/
கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வு செங்கையில் இன்று நடக்கிறது
கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வு செங்கையில் இன்று நடக்கிறது
கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வு செங்கையில் இன்று நடக்கிறது
ADDED : டிச 27, 2025 05:51 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு, இன்று நடக்கிறது.
முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான ஓ.எம்.ஆர்., தேர்வு, இன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடக்கிறது. அதன் பின் எழுத்து தேர்வு, மாலை 3:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை மகளிர் மேல் நிலைப்பள்ளி, லிட்டில் ஜாக்கி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடக்கிறது.
தேர்வு மையங்களுக்கு காலை 8:30 மணிக்கு, தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். பிற்பகல் தேர்வுக்கு 2:00 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவர்.
தேர்வர்கள் வரும் போது ஆதார், பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் 'ஒரிஜினல்' கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

