/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
/
அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
ADDED : டிச 29, 2025 07:11 AM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில், நிழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் பகுதி சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில், பேருந்து நிறுத்தம் உள்ளது.
இங்கு, சென்னை செல்லும் மார்க்கத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நிழற்குடை அமைக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு, பயணியர் காயம் அடைந்தனர்.
இதை தவிர்க்கும் விதமாக, 100 அடி துாரத்தில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டது.
கோடை வெயிலின் காரணமாக, பயணியரின் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகத்தின் மூலமாக, துணியாலான நிழற்குடை அமைக்கப்பட்டது.
கடந்தாண்டு, நிழற்குடையில் இருந்த துணி காற்றில் பறந்து கிழிந்து வீணானதால் அப்புறப்படுத்தப்பட்டது.
தற்போது, அங்கு நிழற்குடை இல்லாததால் பயணியர் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை நீடிக்கிறது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

