sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேங்கைவாசலில் மனை உட்பிரிவு அனுமதியில் முறைகேடு என புகார்

/

வேங்கைவாசலில் மனை உட்பிரிவு அனுமதியில் முறைகேடு என புகார்

வேங்கைவாசலில் மனை உட்பிரிவு அனுமதியில் முறைகேடு என புகார்

வேங்கைவாசலில் மனை உட்பிரிவு அனுமதியில் முறைகேடு என புகார்


ADDED : செப் 28, 2024 04:32 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், : வேங்கைவாசல் கிராமத்தில், விதிமுறையை மீறி, மனை உட்பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, மனு அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில், பத்து ரூபாய் இயக்கம் சார்பில், புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட, 15 ஊராட்சிகளில், பொதுமக்கள் கட்டடம் கட்டுவதற்கும், மனை உட்பிரிவு பெறுவதற்கும் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

மனை உட்பிரிவுக்கு அனுமதி வழங்குவதில், ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன.

கிராம நத்தம் மனைகளில், இரண்டு குடியிருப்பு உடைய கட்டடம் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வழங்க, சி.எம்.டி.ஏ.,வில் விதிமுறைகள் உள்ளன.

ஆனால், கிராம நத்தம் மனைகளில் வணிக கட்டடம் மற்றும் மனை உட்பிரிவு வழங்குவதற்கு எந்த விதிமுறையும் இல்லை.

அப்படியிருக்கையில், வேங்கைவாசல் கிராமத்தில், கெங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள கிராம நத்தம் மனையில், அரசு விதிமுறைகளுக்கு மாறாக, ஆறு மனைகளாக உட்பிரிவு செய்து, ஒன்றிய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us