/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் வடிகால்வாய் பணி நிறைவு
/
மழைநீர் வடிகால்வாய் பணி நிறைவு
ADDED : அக் 12, 2024 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:நெல்வாய் ஊராட்சியில், பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மழைக் காலங்களில் சேகரமாகும், மழை நீர் தெருவோரம் வழிந்தோடி, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வந்தன. இதனால், மழைக்காலங்களில் சேரும், சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது.
இதுகுறித்து, பகுதிவாசிகள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில், 15வது மானிய குழு திட்டத்தின் வாயிலாக, 2023 -- 24ம் ஆண்டில், மழைநீர் வடிகால் அமைக்க, 3.60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கி, தற்போது நிறைவடைந்தன.