sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கட்டுமான நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

/

கட்டுமான நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

கட்டுமான நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

கட்டுமான நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்


ADDED : ஜன 15, 2025 11:58 PM

Google News

ADDED : ஜன 15, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஊனமாஞ்சேரியில், 'கிரீன் அவென்யு ஹோம்ஸ் மற்றும் கார்டன்ஸ்' நிறுவனம் சார்பில், 2013ல் குடியிருப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் வீடு வாங்க, வெங்கடகிருஷ்ணன் ராமசாமி என்பவர், முன்பதிவு செய்தார்.

இதற்காக வீட்டின் விலையான, 73.45 லட்ச ரூபாயில், 51.41 லட்ச ரூபாயை அவர் செலுத்தினார். ஒப்பந்தத்தில் உறுதி அளித்தபடி அந்நிறுவனம் கட்டுமான பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், 2019ல் வெங்கடகிருஷ்ணன் ராமசாமி, புகார் அளித்தார்.

இதை விசாரித்த ஆணையம், 2020 ஜன., 31க்குள் வீட்டை ஒப்படைக்ககட்டுமான நிறுவனத்துக்கு,2019ல் உத்தரவிட்டது. மேலும் மனுதாரருக்கு, 50,000 ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவுக்காக, 20,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை, கட்டு மான நிறுவனம் செயல்படுத்தவில்லை. இதையடுத்து இந்த வழக்கு ரியல் எஸ்டேட் ஆணையத்தின், தலைவர் ஷிவ்தாஸ் மீனா, உறுப்பினர்கள் எல்.சுப்ர மணியன், எம்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அமர்வு பிறப்பித்தஉத்தரவு:

ஆணையம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை கட்டுமான நிறுவனம் செயல்படுத்தாதது உறுதி யாகிறது. வரும் மார்ச் 31க்குள் அனைத்து பணிகளையும் முடித்து வீட்டை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த குடியிருப்பில் பொது வசதிகள் தொடர்பான பணிகளை, மே, 31க்குள் முடித்து ஒப்படைக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் சட்டப்படி இந்த குடியிருப்பு திட்டம் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளது.ரியல் எஸ்டேட் விதிகளை மீறியதற்காக, அந்த கட்டுமான நிறுவனத்துக்கு, ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. வரும் மார்ச், 31க்குள் அபராத தொகையை கட்டுமான நிறுவனம், ஆணையத்தில் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us