/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆப்பூரில் புதிய நிழற்குடை அமைக்கும் பணிகள் வேகம்
/
ஆப்பூரில் புதிய நிழற்குடை அமைக்கும் பணிகள் வேகம்
ADDED : நவ 11, 2024 11:58 PM

மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில், ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு, செங்கல்பட்டு - திருவள்ளூர் தடத்தில் செல்லும் 82சி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன் ஆறு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட போது, இந்த தடத்தில் சாலையோரம் இருந்த பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டன.
சாலை விரிவாக்கப் பணி முடிந்தும், மீண்டும் நிழற்குடை அமைக்கவில்லை.
இந்த இரண்டு கிராமங்களிலும், பேருந்து நிறுத்தங்களின் இருபுறமும் நிழற்குடை இல்லாததால், பயணியர் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வந்தது.
எனவே, நிழற்குடை அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இது குறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
தற்போது, ஆப்பூர் டேங்க் பேருந்து நிறுத்தத்தில், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதே போல், சேந்தமங்கலம் பேருந்து நிறுத்தத்தில், தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக, இரண்டு பேருந்து நிறுத்த நிழற்குடை, ஆப்பூர் நிறுத்தத்தில் ஊராட்சி நிதியில் இருந்து நிழற்குடை அமைக்கும் பணிகள், வேகமாக நடைபெற்று வருகின்றன.