/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தலையில் கம்பி விழுந்து கட்டட தொழிலாளி பலி
/
தலையில் கம்பி விழுந்து கட்டட தொழிலாளி பலி
ADDED : ஜன 25, 2025 12:08 AM
சிங்கபெருமாள்
மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன், 30. கூலி தொழிலாளி. இவர் சிங்கபெருமாள் கோவிலில் தங்கி பாரேரி ஜி.எஸ்.டி., சாலை அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக கட்டடத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை கிரேன் இயந்திரம் வாயிலாக, கட்டுமான பொருட்களை நவநீத கிருஷ்ணன் மேலே ஏற்றிக் கொண்டு இருந்தார். அப்போது கிரேன் இயந்திர பெல்ட்டில் இருந்த இரும்பு கம்பி தவறி நவநீத கிருஷ்ணன் தலையில் விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த அவரை தொழிலாளர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நவநீத கிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

