/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் இன்று கூட்டுறவு வார விழா
/
செங்கையில் இன்று கூட்டுறவு வார விழா
ADDED : நவ 20, 2025 03:57 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், மாவட்ட அளவிலான 72வது அனைத்திந்திய கூட்றவு வார விழா, கலெக்டர் சினேகா தலைமையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ --- மாணவியருக்கு பரிசுகள் வழங்க உள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் விழாக்குழு தலைவர் நந்தகுமார் வரவேற்கிறார். விழாவில், எம்.பி., --- எம்.எல்.ஏ., உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்றவுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

