/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநகராட்சி ஊழியர் விபத்தில் பலி
/
மாநகராட்சி ஊழியர் விபத்தில் பலி
ADDED : ஜூலை 15, 2025 12:15 AM
மேல்மருவத்துார், லாரி மீது பைக் மோதிய விபத்தில், சென்னை மாநகராட்சி ஊழியர் உயிரிழந்தார்.
சென்னை, பட்டினம்பாக்கத்தை சேர்ந்தவர் தனசேகரன், 46. இவர், சென்னை மாநகராட்சி, அடையாறு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு, தன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், புலியனுார் கிராமத்திற்கு, 'ஸ்பிலண்டர்' பைக்கில், செய்யூர் - வந்தவாசி சாலையில் சென்றார்.
அப்போது, சோத்துப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், எதிரே வந்த 'அசோக் லேலண்ட்' லாரியின் டயரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயம் ஏற்பட்டு, ஆம்புலன்சில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேல்மருவத்துார் போலீசார், தனசேகரன் உடலை மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.