sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையில் உலா வரும் மாடுகள் கூடுவாஞ்சேரியில் அடிக்கடி விபத்து

/

சாலையில் உலா வரும் மாடுகள் கூடுவாஞ்சேரியில் அடிக்கடி விபத்து

சாலையில் உலா வரும் மாடுகள் கூடுவாஞ்சேரியில் அடிக்கடி விபத்து

சாலையில் உலா வரும் மாடுகள் கூடுவாஞ்சேரியில் அடிக்கடி விபத்து


ADDED : ஜன 28, 2025 11:49 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலை, நெல்லிக்குப்பம் பிரதான சாலை, நந்திவரம் உள்ளிட்ட நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சாலைகளில் மாடுகள் அதிகமாக சுற்றித் திரிகின்றன.

இவ்வாறு திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, நந்திவரம் - கூடுவாஞ்சேரி, ஜி.எஸ்.டி., சாலை, நெல்லிக்குப்பம் பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, அதிக அளவில் மாடுகள் திரிகின்றன.

இவற்றால், நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகமாகி வருகின்றன.

எனவே, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, மாடுகளின் உரிமையாளருக்கு கடும் அபராதம் விதிக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us