sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'ப்ரீ பயர்' விளையாடிய வாலிபருக்கு வெட்டு

/

'ப்ரீ பயர்' விளையாடிய வாலிபருக்கு வெட்டு

'ப்ரீ பயர்' விளையாடிய வாலிபருக்கு வெட்டு

'ப்ரீ பயர்' விளையாடிய வாலிபருக்கு வெட்டு


ADDED : பிப் 09, 2025 09:12 PM

Google News

ADDED : பிப் 09, 2025 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்‍:சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் என்பவரது மகன் பாலா,18.

நேற்று மாலை 5:15 மணியளவில் இவர், அதே பகுதியில் உள்ள தாலிமங்கலம் சாலையில், நண்பர்கள் நான்கு பேருடன் மொபைல் போனில்,'ப்ரீ பயர்' விளையாடினார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாபு,45, என்பவர், வீட்டின் அருகில் வந்து ஏன் விளையாடுகிறீர்கள் எனக் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

பாலா உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து செல்ல முயன்ற போது, மது போதையில் இருந்த பாபு, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால், இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் முற்றி, பாபு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, பாலாவின் இடது பக்க தலையில் வெட்டி உள்ளார்.

பாலாவின் நண்பர்கள், அருகில் இருந்த கல்லை எடுத்து பாபுவை தலையில் தாக்கியதில், அவருக்கும் காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று, பாலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us