sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலை பணி நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகை இல்லாததால் அபாயம்

/

சாலை பணி நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகை இல்லாததால் அபாயம்

சாலை பணி நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகை இல்லாததால் அபாயம்

சாலை பணி நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகை இல்லாததால் அபாயம்


ADDED : ஜன 31, 2025 12:40 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள்கோவில்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திருவடிசூலம் ஊராட்சியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சிவன் கோவில் செல்லும் பிரதான சாலை ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி இரு மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு புறம் சாலை பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலை நடுவே குடிநீர் குழாய்களுக்காக 4 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இந்த பள்ளத்தை சுற்றி எச்சரிக்கை பலகை மற்றும் இரவில் ஒளிரும் பட்டைகள் இல்லாதாதல் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

திருவடிசூலம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்ல இருசக்கர வாகனங்களில் சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாக மூடப்படாமல் உள்ளது. எச்சரிக்கை பலகையும் இல்லாதால் விபத்து அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us