sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெருங்களத்துார் ஜி.எஸ்.டி., சாலையில் மரண பள்ளங்களால் விபத்து அபாயம்

/

பெருங்களத்துார் ஜி.எஸ்.டி., சாலையில் மரண பள்ளங்களால் விபத்து அபாயம்

பெருங்களத்துார் ஜி.எஸ்.டி., சாலையில் மரண பள்ளங்களால் விபத்து அபாயம்

பெருங்களத்துார் ஜி.எஸ்.டி., சாலையில் மரண பள்ளங்களால் விபத்து அபாயம்


ADDED : டிச 26, 2024 12:44 AM

Google News

ADDED : டிச 26, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார், பெருங்களத்துாரில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில், நெடுங்குன்றம் மார்க்கமான பாதை மட்டும் இன்னும் முடியவில்லை. மற்ற பாதைகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

இதனால், ஜி.எஸ்.டி., சாலை வழியாக செல்லும் பெரும்பாலான வாகனங்கள், மேம்பாலத்தில் ஏறி இறங்குகின்றன.

மேம்பாலத்தை திறந்ததால், ஜி.எஸ்.டி., சாலையை மறந்துவிட்டனர். இதனால், சாலை சீர்குலைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக மாறிவிட்டது.

மேம்பாலத்தின் கீழ், தாம்பரம் மார்க்கமான சாலை சீர்குலைந்து, தொடர்ச்சியாக பள்ளம், மேடாகவும், ஆங்காங்கே மரண பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன.

நாள்தோறும் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, பள்ளம் எங்குள்ளது என்பது தெரியும். அதனால், அவர்கள் விபத்தில் சிக்காமல் செல்கின்றனர்.

ஆனால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள் தொடர் மேடு, பள்ளத்தை சமாளித்தாலும், திடீர் திடீரென வரும் மரண பள்ளங்களை பார்த்து, ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல், கீழே விழுந்து அடிபடுகின்றனர்.

சிலர், திடீரென வரும் பள்ளத்தை பார்த்து, அதில் இறக்காமல் இருக்க வாகனத்தை வளைக்கும் போது, தடுமாறி கீழே விழுந்தும், மற்ற வாகனங்கள் மீது மோதியும் விபத்தில் சிக்குகின்றனர்.

பெருங்களத்துாரில் விபத்து ஏற்படாத நாட்களே இல்லை எனக்கூறும் அளவிற்கு, ஒவ்வொரு நாளும் விபத்து ஏற்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைத் துறைக்கு புகார் தெரிவித்தும், சாலையை சீரமைப்பதில் போக்குவரத்து போலீசார் தீவிரம் காட்டுவதில்லை.

இப்படியே போனால், மரண பள்ளங்கள் மேலும் பெரியதாகி, அதனால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதில் மாற்றமில்லை.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியம் காட்டாமல், பெருங்களத்துார் ஜி.எஸ்.டி., சாலையில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக முன்வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us