sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இருள் சூழ்ந்த நெடுஞ்சாலை கிராம பெண்கள் 'திக் திக்'

/

இருள் சூழ்ந்த நெடுஞ்சாலை கிராம பெண்கள் 'திக் திக்'

இருள் சூழ்ந்த நெடுஞ்சாலை கிராம பெண்கள் 'திக் திக்'

இருள் சூழ்ந்த நெடுஞ்சாலை கிராம பெண்கள் 'திக் திக்'


ADDED : பிப் 04, 2024 05:45 AM

Google News

ADDED : பிப் 04, 2024 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் -- தெள்ளிமேடு சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

திருக்கச்சூர், தெள்ளிமேடு, கொளத்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையில் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் அதிகளவில் நடந்து செல்வது வழக்கம். இங்குள்ள ஆபத்து கால்வாய் பகுதியில், இரவு நேரங்களில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாததால், இப்பகுதி முழுதும் கும்மிருட்டாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து இப்பகுதி பெண்கள் கூறியதாவது:

இந்த பகுதியில் இரவு நேரம் தெரு விளக்குகள் எரியாததால், பணி முடித்து இவ்வழியாக நடந்து செல்ல அச்சமாக உள்ளது. எனவே, சாலையோரம் தெரு விளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us