/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதல்வர் மருந்தகம் அமைக்க 10ம் தேதிவரை அவகாசம்
/
முதல்வர் மருந்தகம் அமைக்க 10ம் தேதிவரை அவகாசம்
ADDED : டிச 07, 2024 08:48 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க வரும் 10ம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மண்டல கூட்டுறவுச்சங்க இணைப்பதிவாளர் நந்தகுமார் அறிக்கை:
தமிழக முதல்வர், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், ஆயிரம் முதல்வர் மருந்தகம் திறக்க உத்தரவிட்டுளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள , பி.பார்ம் மற்றும் டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன்
www.mudhalvarmarundhagam.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர் கடந்த 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வரும் 10ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.