sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார மையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை

/

கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார மையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை

கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார மையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை

கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார மையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை


ADDED : செப் 07, 2025 10:32 PM

Google News

ADDED : செப் 07, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில் இயங்கிவரும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தை, பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜி.எஸ்.டி., சாலையில், 5 ஏக்கர் பரப்பில், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும், 300 முதல் 500 நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

தவிர, மகப்பேறு, குழந்தை நலன் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சையும், சித்த மருத்துவத்திற்கு தனிப்பிரிவும், தனியார் பங்களிப்புடன் இலவச 'டயாலிசிஸ்' சிகிச்சை மையமும் உள்ளது.

கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்பிற்கு இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இது, ஆரம்ப சுகாதார நிலையம் என்பதால், குறிப்பிட்ட சிகிச்சைகள் மட்டுமே இங்கு அளிக்கப் படுகின்றன.

நோயின் தீவிரம் பொறுத்து, மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அல்லது செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப் படுகின்றனர்.

இதனால், நோயாளிகளுக்கு நேர விரயம், அலைச்சல், மன உளைச்சல் ஏற்படுகிறது.

எனவே, இப்பகுதி மக்கள் அனைத்து வகையான சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், கூடுவாஞ்சேரியில் இயங்கிவரும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us