/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரும்புலிச்சேரி பாலாற்றில் பழைய தரைப்பாலம் இடிப்பு
/
இரும்புலிச்சேரி பாலாற்றில் பழைய தரைப்பாலம் இடிப்பு
இரும்புலிச்சேரி பாலாற்றில் பழைய தரைப்பாலம் இடிப்பு
இரும்புலிச்சேரி பாலாற்றில் பழைய தரைப்பாலம் இடிப்பு
ADDED : மார் 15, 2024 09:37 PM
நெரும்பூர்:திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பாலாற்றில், கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட தரைப்பாலம், அப்பகுதியினரின் போக்குவரத்திற்கு பயன்பட்டது.
கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், இப்பாலம் இடிந்தது. அதன்பின், தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வந்தன.
கடந்த டிச., வெள்ளத்தில், இந்த பாலமும் உருக்குலைந்து, எடையாத்துார் வழியே,5 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலைஏற்பட்டது. புதிய பாலம் கட்ட வலியுறுத்தப் பட்டதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை,51.87 கோடி ரூபாய் மதிப்பில், புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து, சேதமடைந்து உருக்குலைந்துள்ள பழைய பாலத்தை இடித்து அகற்றும் பணியில், பாலாற்றில் புதிய உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிக்கானஒப்பந்த நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

