/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூரில் குவிந்த பக்தர்கள்
/
திருப்போரூரில் குவிந்த பக்தர்கள்
ADDED : டிச 05, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்,
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் விசேஷ நாட்களில், திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான நேற்று, கந்த சுவாமி கோவிலில், ஏராளமான திருமணங்கள் நடந்தன.
இது தவிர, திருப்போரூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளிலுள்ள திருமண மண்டபங்களில் திருமணம் முடித்தோரும், கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசித்தனர்.
இதனால், கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
அதேபோல் மொட்டை அடித்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர்.