/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேவையற்ற இடத்தில் குளம் வெட்டி ரூ.23 லட்சம் வரிப்பணம் வீணடிப்பு
/
தேவையற்ற இடத்தில் குளம் வெட்டி ரூ.23 லட்சம் வரிப்பணம் வீணடிப்பு
தேவையற்ற இடத்தில் குளம் வெட்டி ரூ.23 லட்சம் வரிப்பணம் வீணடிப்பு
தேவையற்ற இடத்தில் குளம் வெட்டி ரூ.23 லட்சம் வரிப்பணம் வீணடிப்பு
ADDED : டிச 12, 2025 06:04 AM

வண்டலுார்: வண்டலுார் ஊராட்சியில், அப்பகுதி மக்கள் விருப்பத்திற்கு மாறாக குளம் வெட்டி, மக்களின் வரிப்பணம் 23 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் பொழுதுபோக்க பூங்கா, நுாலகம் உள்ளிட்ட எவ்வித வசதியும் இல்லை.
இங்கு, வாலாஜாபாத் சாலையோரம் உள்ள தாங்கல் ஏரியை துார்வாரி, அதன் கரையோரம் நடைபயிற்சிக்கான பாதை அமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், இவர்களின் விருப்பத்திற்கு மாறாக, தாங்கல் ஏரிக்கு எதிரே உள்ள பிள்ளையார் கோவில் அருகே, 2022ல் குளம் வெட்டப்பட்டது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலமாக, 23.55 லட்சம் ரூபாய் செலவில், 50 சென்ட் இடத்தில் இந்த குளம் வெட்டப்பட்டு, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

