sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கோமாரி நோய் தடுப்பூசி வரும் ஜன., 3ல் துவக்கம்

/

கோமாரி நோய் தடுப்பூசி வரும் ஜன., 3ல் துவக்கம்

கோமாரி நோய் தடுப்பூசி வரும் ஜன., 3ல் துவக்கம்

கோமாரி நோய் தடுப்பூசி வரும் ஜன., 3ல் துவக்கம்


ADDED : டிச 20, 2024 10:08 PM

Google News

ADDED : டிச 20, 2024 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணி, வரும் ஜன., 3ம் தேதி துவங்குகிறது.

கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கால், வாய் ஆகிய பகுதிகளில், கோமாரி நோய் தாக்கப்படுகிறது. இதனால், கால்நடைகள் இறப்பதால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 2 லட்சத்து 54 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தேசிய கால்நடை நோய் தடுப்பூசி பணி, வரும் ஜன., 3ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது.

கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசு, எருது, எருமை மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றுக்கு, கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us