sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காஞ்சியில் வில் வீரன் நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

/

காஞ்சியில் வில் வீரன் நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

காஞ்சியில் வில் வீரன் நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

காஞ்சியில் வில் வீரன் நடுகல் சிற்பம் கண்டெடுப்பு


ADDED : பிப் 26, 2024 12:33 AM

Google News

ADDED : பிப் 26, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சி, இந்திரா நகரில், பல நுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வில் வீரன் நடுகல் சிற்பம், நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அன்பழகன் தலைமையில், எம்.ஏ., முதுகலை பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் அடங்கிய குழுவினர், காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில், நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில், நிலப்பரப்பிலிருந்து 50 செ.மீ., அளவு உயரம் மட்டும் வெளியில் தெரியும்படி, வில் வீரன் நடுகல் சிற்பம் இருந்ததை கண்டறிந்தனர்.

மண்ணில் புதைந்திருந்த இச்சிற்பத்தை வெளியில் எடுத்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, உதவி பேராசிரியர் அன்பழகன் கூறியதாவது:

கோனேரிகுப்பம், இந்திரா நகரில் கண்டெடுக்கப்பட்ட சிலை, 174 செ.மீ., உயரமும், 50 செ.மீ., முன்பக்க அகலம், 20 செ.மீ., பக்கவாட்டு அகலமும் உடையது. இது 64 செ.மீ., அளவில் பீடமும், 77 செ.மீ., அளவில் வில் வீரன் சிற்பமும், தலைக்கு மேல் 33 செ.மீ., அளவு வெற்றுப் பகுதியாகவும் உள்ளது.

வீரனின் இடது கையில் வில் ஒன்றும், வலது கை மணிக்கட்டு உடைந்த நிலையிலும் உள்ளது. கழுத்திலும், தோள்களிலும் அணிகலன்களும், இடைப்பகுதியில் ஆடையும் உள்ளது.

கல்வெட்டு எழுத்துகள் எதுவும் இல்லாத இந்நடுகல் சிற்பத்தின் காலம், கி.பி.15 - 16ம் நுாற்றாண்டாக இருக்கலாம் என அறியப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us