/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறுக்கே புகுந்த நாய்;பைக்கில் சென்றவர் பலி
/
குறுக்கே புகுந்த நாய்;பைக்கில் சென்றவர் பலி
ADDED : அக் 25, 2024 08:03 PM
செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், 44; விவசாயி.
பவுஞ்சூரில் இருந்து தன் ஸ்பிளண்டர் இருசக்கர வாகனத்தில், புதுப்பட்டு நோக்கி நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சென்றுகொண்டு இருந்தார்.
இரணியசித்தி ஏரிக்கரை அருகே சென்றபோது, நாய் திடீரென குறுக்கே வந்ததால் அதன் மீது மோதி, டூ - வீலர் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில், பலத்த காயமடைந்த ஜெயபாலை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9:30 மணிக்கு உயிரிழந்தார்.
விபத்து குறித்து, செய்யூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.