sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

டிரைவர் மண்டை உடைப்பு போதை நபர்கள் அட்டூழியம்

/

டிரைவர் மண்டை உடைப்பு போதை நபர்கள் அட்டூழியம்

டிரைவர் மண்டை உடைப்பு போதை நபர்கள் அட்டூழியம்

டிரைவர் மண்டை உடைப்பு போதை நபர்கள் அட்டூழியம்


ADDED : நவ 24, 2024 01:02 AM

Google News

ADDED : நவ 24, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:சென்னை அசோக் நகரில் தங்கி, கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வருபவர் சரவணன், 24. இவர், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி 'மாருதி ஸ்விப்ட்' காரில் சென்று கொண்டிருந்தார்.

வண்டலுார் மேம்பாலம் அருகே வந்தபோது, குடிபோதையில் 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த செங்கல்பட்டைச் சேர்ந்த பாலாஜி, 24, ஆசிக், 19, தரணி, 22, ஆகிய மூவரும், காரின் முன் பகுதியில் மோதுவது போல் வந்து, ரகளையில் ஈடுபட்டனர்.

மூவரும் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, ஹெல்மெட்டால் சரவணனை தாக்கினர். இதில், சரவணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக, சரவணன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தார்.

புகாரின்படி, கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சரவணனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மூவரையும் கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us