/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுய உதவி குழுவினருக்கு டிரோன் ஸ்பிரேயர்
/
சுய உதவி குழுவினருக்கு டிரோன் ஸ்பிரேயர்
ADDED : செப் 27, 2024 07:56 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட மகளிர் திட்டம் வாயிலாக, எல்.எண்டத்துார், நெடுங்கல், காவாதுார், ஓணம்பாக்கம், நெட்ரம்பாக்கம் ஊராட்சிகளை சேர்ந்த ஐந்து சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு, தலா 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், டிரோன் ஸ்பிரேயர் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டதில், மகளிர் சுய உதவி குழுவினர் காட்சிப்படுத்திய டிரோன் ஸ்பிரேயர் இயந்திரங்களை, கலெக்டர் அருண்ராஜ் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர்.
டிரோன் ஸ்பிரேயரைப் பயன்படுத்தி குறைவான நேரத்தில், குறைந்த செலவில், சீராக பூச்சிகொல்லி, திரவ உரம், மீன் அமிலம் போன்றவற்றைக் தெளிக்க முடியும். ஒரு ஏக்கர் பயன்பாட்டிற்கு, 500 ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது.
தேவைப்படும் விவசாயிகள், தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள்: எல்.எண்டத்துார் - லட்சுமி 76396 24934, நெடுங்கல் - சுகன்யா, 80566 64996, காவாதுார் - தனலட்சுமி 94443 11116, ஓணம்பாக்கம் - ஸ்வேதா 63748 20950, நெட்ரம்பாக்கம் - முனியம்மாள் 93427 34977.