sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சகோதரரை குத்தி வீட்டையும் எரித்த போதை வாலிபருக்கு வலை

/

சகோதரரை குத்தி வீட்டையும் எரித்த போதை வாலிபருக்கு வலை

சகோதரரை குத்தி வீட்டையும் எரித்த போதை வாலிபருக்கு வலை

சகோதரரை குத்தி வீட்டையும் எரித்த போதை வாலிபருக்கு வலை


ADDED : ஆக 27, 2025 12:34 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூரில், மதுபோதையில் சகோதரரை பாட்டிலால் குத்திவிட்டு, குடிசை வீட்டையும் எரித்த வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்போரூரை அடுத்த எடர்குன்றம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி தேவி, 50. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், மூன்றாவது மகன் ஜெகதீஷ், 22, குடிபோதையில், தாயிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதைப் பார்த்த இரண்டாவது மகன் சதீஷ், 25, தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், அங்கிருந்த காலி மதுபாட்டிலை உடைத்து, சதீஷின் கழுத்தில் குத்தி கிழித்துள்ளார்.

மேலும், குடிசை வீட்டையும் தீயிட்டு கொளுத்திவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார். இதில், குடிசை வீடு முழுதுமாக எரிந்து நாசமானது.

அங்கிருந்தோர் காயமடைந்த சதீஷை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவருக்கு கழுத்தில், 11 தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெகதீசை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us