sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வாலிபர்களிடம் ரூ.10 லட்சம் வசூலித்த 'டம்மி' போலீஸ்

/

வாலிபர்களிடம் ரூ.10 லட்சம் வசூலித்த 'டம்மி' போலீஸ்

வாலிபர்களிடம் ரூ.10 லட்சம் வசூலித்த 'டம்மி' போலீஸ்

வாலிபர்களிடம் ரூ.10 லட்சம் வசூலித்த 'டம்மி' போலீஸ்


ADDED : பிப் 14, 2024 11:29 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி:கொடுங்கையூர், எம்.ஆர்.நகர், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 24; மருத்துவ பிரதிநிதி.

இவரது நண்பர் பிரவீன்குமார் என்பவர், அவசர உதவிக்காக ஜன., 5ம் தேதி, 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க நேற்று, மணிகண்டனை பிரவீன்குமார் அழைத்துள்ளார்.

மணிகண்டன் செல்ல முடியாத சூழல் இருந்ததால், தன் மைத்துனரான கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த மற்றொரு மணிகண்டன், 21, என்பவரை பணம் வாங்கி வர அனுப்பியுள்ளார்.

மேற்படி மணிகண்டன், தன் நண்பர் ஒருவருடன் பட்டாளம் சென்று, பிரவீன்குமாரிடம் 10 லட்சம் ரூபாய் வாங்கி, 'ஸ்கூட்டர் டிக்கி'யில் வைத்துக் கொண்டு திரும்பினார்.

பேசின்பாலத்தைக் கடந்து வியாசர்பாடி, எருக்கஞ்சேரி மேம்பாலம் வழியாக வந்த போது, இரு பைக்கில் வந்த நால்வர், இவர்களை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.

தங்களை போலீஸ் எனக் கூறி, மணிகண்டனின் மொபைல்போனை பறித்ததுடன், ஸ்கூட்டர் டிக்கியை திறக்க வைத்துள்ளனர்.

அதிலிருந்த 10 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, 'இந்த பணம் யாருடையது' எனக் கேட்டுள்ளனர். பின்,'போலீஸ் ஸ்டேஷனில் வந்து எழுதிக் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்' எனக் கூறியபடி, மணிகண்டனின் ஸ்கூட்டர் சாவியை எடுத்துக் கொண்டு, நால்வரும் தப்பியுள்ளனர்.

இதுகுறித்து, வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us