/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இ - சேவை மையம் துவக்கம்
/
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இ - சேவை மையம் துவக்கம்
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இ - சேவை மையம் துவக்கம்
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இ - சேவை மையம் துவக்கம்
ADDED : மே 16, 2025 02:17 AM

அச்சிறுபாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட கட்டடத்தில், வட்டார இ -- சேவை மையம் துவக்கப்பட்டு உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்ட சேவைகளை,'ஆன்லைன்' வாயிலாக பெற, தமிழக மின்னாளுமை முகமை, தமிழக கேபிள்,'டிவி' நிறுவனம் ஆகியவை, அரசு இ- சேவை மையங்களை நடத்துகின்றன.
பிறப்பு, இறப்புச் சான்று, வாரிசு சான்று, குடும்ப அட்டை பதிவு செய்தல், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட பல்வேறு சேவைகளுக்கு, இங்கு விண்ணப்பம் செய்யலாம்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள இ- - சேவை மைய கட்டடங்கள் பெரும்பாலும் பூட்டியே கிடப்பதால், பொதுமக்கள் நகர பகுதிகளில் செயல்படும் இ- - சேவை மையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அதனால் தற்போது, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட கட்டடத்தில், வட்டார இ - சேவை மையம் துவக்கப்பட்டு உள்ளது.