sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விரைவு ரயில் மோதி முதிய தம்பதி பலி

/

விரைவு ரயில் மோதி முதிய தம்பதி பலி

விரைவு ரயில் மோதி முதிய தம்பதி பலி

விரைவு ரயில் மோதி முதிய தம்பதி பலி


ADDED : நவ 05, 2024 11:43 PM

Google News

ADDED : நவ 05, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் ரயில் நிலையம் அருகில், நேற்று முன்தினம் மாலை விரைவு ரயில் மோதி, வயது முதிர்ந்த இருவர் இறந்து கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்று, ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர்கள் மறைமலை நகர் அடுத்த ரயில் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்வேலன், 80, அவரது மனைவி பசும்பொன், 70, என்பது தெரிய வந்தது.

இருவரும், ராமேஸ்வரம் செல்ல, செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக, மறைமலை நகர் ரயில் நிலையம் வந்துள்ளனர். வயது முதிர்வு காரணமாக, நடைபாதை மேம்பால படிக்கட்டுகளில் ஏறி செல்லாமல், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, பல்லவன் விரைவு ரயில் மோதி உயிரிழந்தது, விசாரணையில் தெரிய வந்தது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் ரயில்வே போலீசார், இருவர் உடலையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நேற்று காலை தண்டவாளம் பகுதியில் இருந்த பாதையை, ரயில்வே ஊழியர்கள் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அடைத்தனர்.






      Dinamalar
      Follow us